டிஐஜி விஜயகுமார் மரணம் - கோவையில் பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய இளைஞர்கள்!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கோவை - தடாகம் சாலை திருவள்ளுவர் நகரை சேர்ந்த இளைஞர்கள் டிஐஜி விஜயகுமாருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாருக்கு இளைஞர்கள் பேனர் வைத்து மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த 7ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது.

டிஐஜி விஜயகுமார் இறப்பிற்கு தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தலைவர், காவல் அதிகாரிகள் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது இந்த தற்கொலை காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் ஊரை சேர்ந்த இளைஞர்கள் டிஐஜி விஜயகுமாருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வில் நஞ்சுண்டாபுரம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் VKV சுந்தரராஜ், தடாகம் காவல்துறையினர் உட்பட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.



இளைஞர்களின் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...