வால்பாறையில் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து தொழில் வளர்ச்சி கழக இயக்குனர் ஆய்வு!

வால்பாறையில் கன மழை பெய்து வரும் நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து தொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் கோவை மாவட்ட தென்மேற்கு பருவ மழை கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: வால்பாறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து தொழில் வளர்ச்சிக் கழக இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கியது. மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில் மரங்கள் விழுந்த நிலையில், சரி செய்யப்பட்டு உள்ளது.

மழையினால் பொது மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் கோவை மாவட்ட தென்மேற்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் வால்பாறை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்புகள் குறித்தும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்தும் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.



இதில் அதிகமாக தண்ணீர் செல்லும் கூழாங்கல் ஆறு, குடியிருப்பு அருகில் செல்லும் வாழை தோட்டம் ஆறு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும் கோவை மாவட்ட வருவாய் துறை அதிகாரி, வால்பாறை மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஜெயஸ்ரீ முரளிதரன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இவர்களுடன் வால்பாறை தாசில்தார் அருள் முருகன், நகர மன்ற தலைவர் அழகுசுந்தர வள்ளி செல்வம் மற்றும் வால்பாறை நகராட்சி ME. வெங்கடாசலம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...