தாராபுரம் விஸ்வேஸ்வரர் கோவிலில் லிங்கத்தை சுற்றிய பாம்புக்கு பால் ஊற்றிய பக்தர்கள்!

தாராபுரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான விஸ்வேஸ்வரர் கோவிலில் லிங்கத்தை சுற்றி படுத்திருந்த ரத்த மண்டல வகையை சேர்ந்த பாம்பிற்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்ட நிலையில், பால் ஊற்றியவர்களை பாம்பு கடிக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான விஸ்வேஸ்வரர் கோவிலில் உள்ள லிங்கத்தை சுற்றிய பாம்பை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டைமேட்டு தெருவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு நடத்தப்படாமல் பூட்டப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கோவிலுக்குள் ரத்த மண்டல வகையை சேர்ந்த பாம்பு ஒன்று செல்வதை கண்ட சிலர், உள்ளே சென்று பார்த்த பொழுது.



அந்த பாம்பு கோவிலில் உள்ள லிங்கத்தை சுற்றியபடி படுத்துக் கொண்டிருந்தது.



இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சுவாமியை சுற்றி படுத்திருந்த பாம்பிற்கு பால் ஊற்றி வணங்கினர்.



சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு அங்கிருந்து ஊர்ந்து செல்ல துவங்கியது.



இதனையடுத்து அப்போது மக்கள் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்தப் பாம்பை பிடித்து பிளாஸ்டிக் பைப்பிற்குள் அடைத்து வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.



லிங்கத்தை சுற்றிய பாம்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...