திருப்பூரில் உலக அளவிலான இயற்கை சார் உற்பத்திக்கான சாய கண்காட்சி துவக்கம்!

திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப் கண்காட்சி வளாகத்தில் உலக அளவிலான இயற்கை சார் உற்பத்திக்கான சாய கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சியில் 40 அரங்குகளில் இயற்கை சார்ந்த உற்பத்திக்கான சாயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பின்னலாடை உற்பத்தியாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.


திருப்பூர்: பழங்கரையில் உள்ள ஐ.கே.எப் கண்காட்சி வளாகத்தில் உலக அளவிலான இயற்கை சார் உற்பத்திக்கான சாய கண்காட்சி துவங்கியது.

திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள இந்தியா நிட் பேர் கண்காட்சி வளாகத்தில் டெக்ஸ்டைல் எக்ஸ்டெலன்ஸ் நிப்ட்- டீ கல்லூரி சார்பில் 2-வது உலக அளவிலான இயற்கை சார்ந்த உற்பத்திக்கான சாயம் தொடர்பான கண்காட்சி நேற்று தொடங்கியது.



வருகிற எட்டாம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் திருப்பூர் பின்னலாடை துறை வளர்ச்சிக்கு தேவையான இயற்கை சாயங்கள், ராணுவ உடைகள் தயாரிப்பதற்கான சாயங்கள், ஆக்டிவ் வியர், விளையாட்டு ஆடைகள் தயாரிப்பதற்கான சாயங்கள், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும், கோடைகாலத்தில் அணியக்கூடிய ஆடைகள் உற்பத்திக்கான சாயங்கள், சுமல் பிரி கார்மெண்ட்ஸ், கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



பின்னலாடை உற்பத்தியாளர்கள் தற்போது பருத்தியினால் ஆன ஆடைகள் தயாரிப்பில் இருந்து தங்களது கவனத்தை சிந்தட்டிக் ரக ஆடைகள் தயாரிப்பில் நகர்ந்துள்ளதால் அதற்கான இயந்திரங்கள் சாயங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.



இந்த கண்காட்சியை ஏராளமான பின்னலாடை உற்பத்தியாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...