கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து : வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுக சார்பில் திடீர் சாலை மறியல்!

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அண்ணா நகரில் தொடர் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் தொடர் விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுக சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வது வழக்கம். இப்பகுதியில் தொடர் விபத்துக்கள் நடப்பதாக அப்பகுதியினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அண்ணா நகர் பகுதியில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து நிகழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தந்தை மற்றும் மகள் இருவரும் காயமடைந்தனர்.



இதனைத்தொடர்ந்து அடிக்கடி அப்பகுதியில் விபத்துக்கள் நடப்பதாகவும் அதனை தடுக்க வேகத்தடை அமைத்து தர கோரி பல்லடம் தமுமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...