கோவை சூலூர் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்!

சூலூர் அடுத்த செஞ்சேரிமலை பகுதியில் மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் மற்றும் அரசு மேல்நிலை பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காமாட்சிபுரி ஆதீனம் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூலூர் அருகே செஞ்சேரி மலையில் மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த மதுக்கடையை அகற்றக் கோரி அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 4 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் செஞ்சேரி மலையில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் மோகன் மந்திராசலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காமாட்சிபுரி ஆதீனம் சாந்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், சுல்தான்பேட்டை ஒன்றிய பொதுச்செயலாளர் ரவி உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது அடை மழை பெய்த போதிலும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்து நகராமல் மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் செஞ்சேரிமலையில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும், மதுவை ஒழிப்போம், நாட்டை காப்போம், ஆகஸ்டு மாதம் 1-ந்தேதிக்குள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும். இல்லை என்றால் கடைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

காமாட்சிபுரி ஆதீனம் சாந்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது, இந்தியா மதுவில்லாத நாடாக மாற நாம் போராட வேண்டும். செஞ்சேரி மலையில் உள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று இப்பகுதியில் அனைவரும் கட்சி பேதமின்றி கோரிக்கை வைக்கின்றனர். இதனை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...