கோவை போக்குவரத்து மாற்றங்கள் குறித்து போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம் ஆய்வு!

கோவை மாநகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சீரான போக்குவரத்துக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.


கோவை: கோவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை மாநகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



அவருடன் மாநகர காவல் ஆணையாளர் போக்குவரத்து மதிவாணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் மற்றும் காவல் துறையினர் சென்றனர்.



அப்போது திருச்சி சாலை சுங்கம், சுங்கம் மேம்பாலம், சிங்காநல்லூர், அவிநாசி சாலை, உப்பிலிபாளையம் சந்திப்பு, காந்திபுரம் பேருந்து நிலையம் சந்திப்பு, பார்க் கேட் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.



பின்னர், போக்குவரத்து சீராக செல்வதற்கும், சிக்னல்கள் பணிகள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும் கேட்டறிந்து சீரான போக்குவரத்துக்கு தேவையான நடவடிக்கைகளை அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...