அத்திக்கடவு அவிநாசி திட்டம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் - தலைமை பொறியாளர் தகவல்

அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தற்போது, சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்தத் திட்டம் அடுத்த மாதம் முழுமையான பயன் பாட்டுக்கு வரும் என நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.


கோவை: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அடுத்த மாதம் முழு பயன்பாட்டுக்கு வரும் என நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் கூறியுள்ளார்.

அன்னூரை அடுத்த குன்னத்தூராம்பாளையத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் தற்போதைய நிலை மற்றும் சோதனை ஓட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் விளக்கினர்.

மேலும், இந்த திட்டம் சில மாதங்களில் முடியும் நிலையில் உள்ளதால் மேற்கொண்டு அந்த நீரை முறையாக பாசனத்துக்கு பயன்படுத்தத் திட்டமிடுவது குறித்தும், கிராமங்களில் இந்த திட்டத்தின் கீழ் குளங்களில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் மின்சாதனப் பொருள்களின் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

இதனையடுத்து, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது, அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பிப்ரவரி முதல் தொடர்ந்து குட்டைகள் மற்றும் குளங்களில் தண்ணீர் நிரப்ப சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அடுத்த மாதம் முழுமையான பயன் பாட்டுக்கு வரும்,

இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கிவைக்க உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதியில் உள்ள 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அன்னூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...