மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட அபகரிக்க முயற்சி - ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா!

மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்பட்ட கடையை திமுக கவுன்சிலர் ஆதரவுடன், திமுக பொறுப்பாளர் கோபால் என்பவர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்பட்ட கடையை திமுக கவுன்சிலர் ஆதரவுடன் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் புலியகுளம் அருகே உள்ள கிட்னி சென்டர் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருபவர் ரீனா ரோஸ்லின். மாற்றுத்திறனாளியான இவர், தனது கணவர் சிவகுமாருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டதை அறிந்த காவல்துறையினர் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ரீனா ரோஸ்லின் கூறியதாவது, நான், எனது கடையை வைத்து தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன். புலியகுளம் கவுன்சிலர் முனியம்மா மற்றும் அவரின் கணவர் பாலமுருகன் பெயரில், திமுக பொறுப்பாளர் கோபால் என்பவர் எனது கடையை தர வற்புறுத்தினார். ஆனால் நான் தர மறுத்துவிட்டேன்.

இந்த சூழலில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென கடையை எடுக்க வற்புறுத்தி வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து ரீனா ரோஸ்லின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் மனுவை அளித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென மாற்றுத்திறனாளி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...