கோவை அருகே சாக்கடைக்குள் விழுந்த நாய்க்குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு குவியும் பாராட்டு!

கோவை மாவட்டம் இடையர்பாளையம் அடுத்த ஜோஸ் கார்டன் பகுதியில் நாய் ஒன்று 8 குட்டிகளை ஈன்ற நிலையில், அதில் 4 குட்டிகள் சாக்கடைக்குள் விழுந்துள்ளன. அதனை பத்திரமாக மீட்டு அதன் தாயிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் இடையர்பாளையம் அருகே சாக்கடைக்குள் விழுந்த நாய் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் இடையர்பாளையம் அருகேயுள்ள ஜோஸ் கார்டன் பகுதியில் தெருநாய் ஒன்று எட்டு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்நிலையில் அதில் நான்கு குட்டிகள் அங்கிருந்த சாக்கடை ஒன்றிற்குள் விழுந்துள்ளது.

இதனால் தாய்நாய் நீண்ட நேரமாக சாக்கடையை பார்த்து கத்திக் கொண்டிருந்த நிலையில் அதனைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த பல் மருத்துவரான முகமது மீரான் உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.



தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் அந்த நான்கு குட்டிகளையும் பத்திரமாக வெளியே எடுத்து அதன் தாயுடன் சேர்த்தனர்.



தகவல் அளித்த சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு சென்று நாய்க்குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...