சோமையம்பாளையம் துணை சுகாதார நிலையத்தை மறுசீரமைக்க கோரி அகில பாரத மக்கள் கட்சி மனு!

சோமையம்பாளையம் அடுத்த கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்து, பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் இருப்பதால், அதனை சீரமைக்க கோரி அகில பாரத கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சோமையம்பாளையம் அருகேயுள்ள துணை சுகாதார நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி அகில பாரத மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

சோமையம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் போதிய பாதுகாப்பின்றி பழுதடைந்து இடிந்து நிலையில் உள்ளது.

மேலும், அங்குள்ள கழிவு நீர் தொட்டி மற்றும் கழிவறையில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கைகள் எடுத்து அதனை மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்து தர வலியுறுத்தி அகில பாரத மக்கள் கட்சியினர், அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமநாதன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை அளித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...