அம்ருத் 2.0 திட்டம் குறித்த உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் - பாஜக மனு!

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அம்ருத் 2.0 திட்டம் பற்றி மக்களுக்கு முழுமையாக உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பெரியநாயக்கன்பாளையம் பாஜக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: அம்ருத் 2.0 திட்டம் குறித்த உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாஜக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் பாஜக நகர மண்டல தலைவர் மகேந்திர ராஜ் தலைமையில் அம்ருத் 2.0 திட்டம் பற்றி மக்களுக்கு முழுமையாக உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பெரியநாயக்கன்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டத்தினை மேம்படுத்த சமூக வலைத்தளமான "நம்ம பெரியநாயக்கன் பாளையம்" என்ற முகநூலில் பணிகள் தொடங்கியுள்ளது என்ற செய்தி ஒன்றாம் தேதி அன்று வெளியாகி உள்ளது.

இந்தத் திட்டத்தை பற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்கும் பொழுது சரியான பதில் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இத்திட்டத்திற்காக தொடக்க விழாவோ பூமி பூஜையோ நடத்தப்படவில்லை, அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை அதன் மதிப்பீடும் தெரியப்படவில்லை.

இந்த திட்டமானது எப்பொழுது துவங்கப்படும்? இத்திட்டம் மத்திய அரசின் திட்டமா அல்லது மாநில அரசின் திட்டமா என்று மக்களுக்கு முழுமையாக தெரியவில்லை எனவும் இதன் உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...