உதவி ஜெயிலர் பணிக்கான தேர்வு - கோவையில் விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் மட்டுமே தேர்வு எழுதினர்!

தமிழக முழுவதும் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற உதவி ஜெயிலர் பணிக்கான எழுத்து தேர்வில் கோவை மாவட்டம் முழுவதும் விண்ணப்பித்தவர்களில் 45 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நடைபெற்ற ஜெயிலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் மட்டுமே தேர்வில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உதவி ஜெயிலர் பணியிடத்திற்கான தேர்வு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் அதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும்நடைபெற்றது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தை பொருத்தவரை இந்த தேர்வுக்காக 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவதற்காக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அனைத்து மையங்களிலும் காலை ஒன்பது முப்பது மணி முதல் இந்தத் தேர்வானது இணையதளம் மூலம் துவங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 40 முதல் 45 சதவீதம் வரையிலான தேர்வர்கள் மட்டுமே பங்கேற்று தேர்வினை எழுதி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் டி.சி.எஸ் நிறுவனம் மூலம் இந்த தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...