உதவி ஜெயிலர் பணிக்கான தேர்வு - கோவையில் விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் மட்டுமே தேர்வு எழுதினர்!

தமிழக முழுவதும் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற உதவி ஜெயிலர் பணிக்கான எழுத்து தேர்வில் கோவை மாவட்டம் முழுவதும் விண்ணப்பித்தவர்களில் 45 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நடைபெற்ற ஜெயிலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் மட்டுமே தேர்வில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உதவி ஜெயிலர் பணியிடத்திற்கான தேர்வு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் அதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும்நடைபெற்றது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தை பொருத்தவரை இந்த தேர்வுக்காக 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவதற்காக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அனைத்து மையங்களிலும் காலை ஒன்பது முப்பது மணி முதல் இந்தத் தேர்வானது இணையதளம் மூலம் துவங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 40 முதல் 45 சதவீதம் வரையிலான தேர்வர்கள் மட்டுமே பங்கேற்று தேர்வினை எழுதி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் டி.சி.எஸ் நிறுவனம் மூலம் இந்த தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...