திருப்பூரில் ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் முதல்முறையாக 2 பெட்ரூம் வீடு 25 அடி தூரம் நகர்த்தப்பட்டது!

திருப்பூர் அடுத்த பாளையக்காடு பகுதியில் முதன்முதலாக 2 பெட்ரூம் உள்ள வீட்டு கட்டிடத்தை இடிக்காமல் நகர்த்தும் உள்நாட்டு தொழில்நுட்பமான ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் 25 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அடுத்த பாளையக்காடு பகுதியில் முதன்முதலாக 2 பெட்ரூம் உள்ள வீட்டு கட்டிடத்தை இடிக்காமல் 25 அடிக்கு ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் நகர்த்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பாளையக்காடு பகுதியில் முதன் முதலாக வீட்டை இடிக்காமல் வீட்டை நகர்த்தும் ஹைட்ராலிக் சிப்டிங் என்கிற உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் ஹைட்ராலிக் ஸ்க்ரூ ஜாக்கி பயன்படுத்தி கட்டிடத்தை அஸ்திவாரத்தில் இருந்து பிரித்து நகர்த்தும் செயல் முறையின் படி 2 பெட்ரூம் உள்ள கட்டிடத்தை 25 அடி தூரம் நகர்த்தப்பட்டது.



மூன்று நாட்கள் நடைபெறும் இந்த இரண்டு பெட்ரூம் கொண்ட வீட்டு கட்டடத்தை நகர்த்தும் பணியில் இதற்கென பிரத்யேகமாக பணிபுரியும் கட்டுமான வல்லுனர்கள், தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.



இந்த ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தில் வீட்டை நகர்த்துவதற்கு முன்னால் வீட்டில் இருக்கும் பழைய தூண்களானது அடித்தளத்தில் அறுக்கப்பட்டு புதிய அடித்தளத்தின் புதுத்தூண்களுடன் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு ஜல்லி கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்படுகின்றது.



அதன் பின்னர் நாள் ஒன்றுக்கு 8 அடி வீதம், 3 நாட்களுக்கு 24 அடி தூரம் நகர்த்தப்படுகிறது.



இந்த ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய வீடு, பெரிய வீடு, கோவில்கள், 5 மாடி கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என எதுவாக இருந்தாலும் எவ்வளவு தூரம் நகர்த்தியும், உயர்த்தியும் விடலாம் என கூறுகின்றனர்.

புதிதாக ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு ஆகும் செலவை காட்டிலும் இது போன்று தொழில் நுட்பத்தின் மூலம் வீட்டை உயர்த்துவதற்கும் நகர்த்துவதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு என செய்தியாளர்கள் சந்திப்பில் குமரன் டெமாலிசர்ஸ் நிறுவனர் பொன்லிங்கம் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...