உடுமலை நகர பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம் துவக்கம்!

உடுமலை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரமும், வீடு வீடாக நலத்திட்ட புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் தெருமுனை பிரச்சாரம் இன்று தொடங்கியது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரமும், வீடு வீடாக நலத்திட்ட புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது.



பாஜக நகர தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பூத் தலைவர் சுகுமார், நகரத் துணை பொதுச் செயலாளர் சீனிவாசன், தம்பித்துரை மாவட்ட செயலாளர் கலா, மத்திய நலத்திட்டம் மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கண்ணப்பன், வித்யா, நகர துணை பொது தலைவர் உமா குப்புசாமி, வர்த்தக அணி தலைவர் பொன் பெருமாள், பூத் கமிட்டி ராஜாராம், வெங்கடாசலம், மருத்துவர் அணி துணைத் தலைவர் உட்பட பல கலந்து கொண்டனர்.



ஏரிபாளையம் பகுதியில் தொடங்கிய இந்த தெருமுனை பிரச்சாரமானது, வி.ஜி.ராவ் நகர், ஸ்டேட் பேங்க் காலனி, வேலன் நகர், யு.எஸ்.எஸ் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...