செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து நீக்கியது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி - வானதி சீனிவாசன் கருத்து!

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கியது, வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் என கூறிய வானதி சீனிவாசன், எதிர்க்கட்சியில் இருந்த போது குற்றச்சாட்டுகளை கூறி, வழக்கை கொண்டு வந்த ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள வெற்றி என்று தான் கூறவேண்டும் என்றார்.


கோவை: செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.



கோவை சித்தாபுதூர் பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை நடைபெற்ற மத்திய பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க பொதுகூட்டத்தில் பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கியது தொடர்பாக இரண்டு விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. குற்ற விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது நியாயமான விசாரணைக்கு உகந்ததாக இருக்காது.

இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் எதை பாதுகாக்க வேண்டும் என ஆளுநராக நியமிக்கப்பட்டாரோ அந்த அரசியலமைப்பு இயந்திரம் சீர்குலையும் நிலைமை உருவாகி கொண்டிருக்ககூடிய காரணத்தால் செந்தில் பாலாஜியை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கிறேன் என ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அரசியலமைப்பை படிக்கும் போது நமக்கு தோன்றுவது அமைச்சர்கள் குழுவை நியமிப்பது, மாற்றுவது, விடுவிப்பது என்பது எல்லாம் முதலமைச்சரின் அதிகாரம் போலவே ஒரு பிம்பம் இருந்தது.

நியாயமான விசாரணை நடக்க வேண்டும், நியாயமான விசாரணை என்பதை மாநிலத்தின் அரசியலமைப்போடு தொடர்பு ஏற்படுத்தி பார்க்க வேண்டும் என்றால் ஆளுநர் எடுக்கக் கூடிய முடிவு எதனால் என்பது புரியும்.

மற்றொன்று உயர்நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு வந்திருக்கிறது. மாநிலத்தின் முதல்வர், ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என கூறினால் நீதிமன்றத்தில் அதற்கான பதிலை அவர்கள் சொல்லலாம். நிச்சயமாக விவாதிக்கலாம்.

ஆனால் அமைச்சர்களுக்கு தரப்பட்டுள்ள ஒரு சட்டபூர்வமான பாதுகாப்பை பயன்படுத்தி குற்றவாளியாக இருக்கக் கூடிய ஒரு நபர் தொடர்ச்சியாக அமைச்சராக இருப்பது என்பது நியாயமான விசாரணை பாதிக்கும் என்பதை எந்த சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்வார்கள்.

அதன் அடிப்படையில்தான் ஆளுநர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இது யாருக்கு கிடைத்த வெற்றி என்பதை விட, இந்த மாதிரி ஒரு முடிவினை எடுக்கக்கூடிய நிலைமைக்கு தள்ளியதற்கு திமுக அரசு தான் வெட்கப்பட வேண்டும்.

இதில் பாஜகவோ அல்லது அதிமுகவோ தங்களுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறினாலும், இதில் வெற்றி அடைந்திருப்பது முதல்வர் ஸ்டாலின் தான் முதலில் போராட்டத்தை ஆரம்பித்தார், செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்தார், குற்ற வழக்கை கொண்டு வந்தார். நாங்கள் கூறாததை ஸ்டாலின் தான் கூறினார்.

இது பாஜக, அதிமுக வெற்றி பெற்றது என்பதைவிட ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்று தான் அவர்கள் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...