சிதம்பரம் கோவில் தீக்‌ஷிதர்களை கைது செய்ய வேண்டும் - தமிழ்நாடு யாதவர் மகா சபை ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

சிதம்பரம் கோயிலில் கடவுளை வழிபடச் சென்ற யாதவ இன முதியவரை தீக்‌ஷிதர்கள் ஆபாச சொற்களால் பேசி கொலை மிரட்டல் விடுத்து அடித்ததாக கூறி அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் கோவை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



கோவை: சிதம்பரம் கோவில் தீக்‌ஷிதர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் கோயிலில் கடவுளை வழிபடச் சென்ற யாதவ இன முதியவரை தீக்‌ஷிதர்கள் ஆபாச சொற்களால் பேசி கொலை மிரட்டல் விடுத்து அடித்ததாக கூறி அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் கோவை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்த போஸ்டரில் சிதம்பரம் கோயிலில் சாமி கும்பிட வந்த யாதவர் இன முதியவரை ஆபாச சொற்களால் பேசி, கொலை மிரட்டல் விட்டு, அடித்து தாக்கிய தீக்‌ஷிதர்களை உடனே கைது செய்!, நடராஜர் அனைத்து சாதி மக்களுக்குமானவர்!, தீக்‌ஷிதர்களுக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாதே!!" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த போஸ்டர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒட்டப்பட்டுள்ளன. 

அண்மையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என்று தீக்‌ஷிதர்களால் வைக்கப்பட்ட பதாகையால் சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...