பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சிக்கும் இல்லை - மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிசான் ரெட்டி கருத்து!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக அனைத்து அணிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி, பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சியினருக்கும் இல்லை, அதனால் தான் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.



கோவை: பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சிக்கும் இல்லை என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிசான் ரெட்டி தெரிவித்துள்ளார். 



மத்திய பாஜக அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில், கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அக்கட்சியின் பல்வேறு அணிகளின் கூட்டம் நடைபெற்றது. 



இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிசான் ரெட்டி, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 



இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர்கள் கனகசபாபதி, ஜி.கே.செல்வகுமார், விவசாய பிரிவு மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி, பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறும் விதமாக கடந்த ஒரு மாதமாக கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்களை நேரடியாக சந்தித்து பேசி வருகிறோம். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினருக்கான வரவேற்பும் ஆதரவும் அதிகமாகியுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் அனைத்து தொகுதிகளிலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் துவங்கியுள்ளனர். 

ஆளும் திமுக குடும்ப ஊழல் ஆட்சிக்கு எதிராக ஒருங்கிணைய மக்கள் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதை ஒவ்வொரு மக்களிடம் எடுத்துச் சென்று வருகிறோம். 

தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் பிகாரில் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சியினருக்கும் இல்லை, அதனால் தான் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து முயற்சி செய்து வருகின்றனர். இந்தியாவின் அனைத்து ஊழல் கட்சிகளும் குடும்பக் கட்சிகளும் சேர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர்களால் ஒற்றுமையாக நிற்க முடியாது.

தற்காலிக பலனுக்காக மட்டுமே அவர்கள் இந்த ஒற்றுமையை வெளிக்காட்டி வருகின்றனர். இவர்களால் ஒற்றை தலைமையிலான பிரதமர் வேட்பாளரின் கீழ் பணி செய்ய முடியாது. இவர்களில் யார் பிரதமர் வேட்பாளர், கூட்டணிக்கு யார் தலைவர் என தீர்மானிக்க முடியவில்லை. 

இந்தியா பல்வேறு விதத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது பல்வேறு பிரச்சனைகளும் உள்ளது. இதை சரி செய்ய சிறப்பான தலைமையை கொண்டுள்ள பாரத பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியினரால் முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...