கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 32 மருத்துவர் பணியிடங்கள் வரும் மாதத்தில் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 32 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், தீர்ப்பு விரைவில் வரவுள்ள நிலையில், வரும் மாதத்திலேயே காலி இடங்கள் நிரப்பப்படும் என உறுதியளிப்பதாக தெரிவித்தார்.



கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள 32 மருத்துவர்கள் காலி பணியிடங்களும் வரும் மாதத்தில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையின் இரண்டாவது பட்டமளிப்பு விழா மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 



இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 2017 எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பை நிறைவு செய்த 101 மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள 32 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கல்லூரி முதல்வர் எங்களிடம் கேட்டார். காலி பணியிடம் நிரப்புவது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. 

இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே இவர்களது கோரிக்கைகள் நிறைவேற உள்ளது, வரும் மாதத்திலேயே இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...