கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 32 மருத்துவர் பணியிடங்கள் வரும் மாதத்தில் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 32 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், தீர்ப்பு விரைவில் வரவுள்ள நிலையில், வரும் மாதத்திலேயே காலி இடங்கள் நிரப்பப்படும் என உறுதியளிப்பதாக தெரிவித்தார்.



கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள 32 மருத்துவர்கள் காலி பணியிடங்களும் வரும் மாதத்தில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையின் இரண்டாவது பட்டமளிப்பு விழா மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 



இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 2017 எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பை நிறைவு செய்த 101 மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள 32 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கல்லூரி முதல்வர் எங்களிடம் கேட்டார். காலி பணியிடம் நிரப்புவது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. 

இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே இவர்களது கோரிக்கைகள் நிறைவேற உள்ளது, வரும் மாதத்திலேயே இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...