கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 32 மருத்துவர் பணியிடங்கள் வரும் மாதத்தில் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 32 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், தீர்ப்பு விரைவில் வரவுள்ள நிலையில், வரும் மாதத்திலேயே காலி இடங்கள் நிரப்பப்படும் என உறுதியளிப்பதாக தெரிவித்தார்.



கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள 32 மருத்துவர்கள் காலி பணியிடங்களும் வரும் மாதத்தில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையின் இரண்டாவது பட்டமளிப்பு விழா மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 



இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 2017 எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பை நிறைவு செய்த 101 மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள 32 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கல்லூரி முதல்வர் எங்களிடம் கேட்டார். காலி பணியிடம் நிரப்புவது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. 

இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே இவர்களது கோரிக்கைகள் நிறைவேற உள்ளது, வரும் மாதத்திலேயே இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...