ரூட்ஸ் குழுமங்களின் சார்பில் "46-வது தேசிய பாதுகாப்பு தின விழா" சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோவையில் செயல்பட்டு வரும் ரூட்ஸ் குழும நிறுவனங்களில் "46-வது தேசிய பாதுகாப்பு தின விழா" இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது அனைத்து நிறுவனங்களிலும், பணியாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு கலாச்சாரத்தை மேம்படுத்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக ரூட்ஸ் கம்பெனி வளாகத்தினுள் பாதுகாப்பு வாசகங்களின் பேனர்கள் அனைத்து பணியாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து, பணியாளர்கள் தங்களது பணிகளை துவங்குவதற்கு முன்பு ஒன்றுகூடி பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.

இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு தினம் குறித்த சிறப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை உற்பத்தி திறன் குழு அரங்கில் நடைபெற்றது.



இதன் துவக்க விழாவில் ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிதாசன் பங்கேற்று பாதுகாப்பு குறித்த கருத்துரை வழங்கினார்.



தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை கூடுதல் இயக்குநர் கே.அருள், விழாவினைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

விழாவில், சரகம் ஒன்று மற்றும் இரண்டின் தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் இணை இயக்குநர்கள் பி.என்.சங்கர் மற்றும் எம்.வி.செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதனைத்தொடர்ந்து, ரூட்ஸ் காஸ்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஓ.ஏ.பாலசுப்ரமணியம் விழாவில் பங்கேற்று பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து, தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் சபீனா மற்றும் வந்தே மாதரம் ஏ.மாதவன் ஆகியோர் பங்கேற்று "தொழில்சாலையில் பாதுகாப்பு" என்ற தலைப்பில் பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சியினை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக "தொழிற்சாலையில் பாதுகாப்பிற்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது" என்ற தலைப்பில் பணியிடச் சூழலே, பாதுகாப்பான செயல்பாடுகளே என்ற இருவேறு கருத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.



இதில், பணியிடச் சூழலே என்ற கருத்தை முன்வைத்து ஆர்.ராஜ்குமார், ஆர்.சுகுமார், எம்.பாரதிராஜா ஆகியோரும், பாதுகாப்பான செயல்பாடுகளே என்ற கருத்தை முன்வைத்து எஸ்.டி.செந்தில்குமார், என்.செந்தில்ராஜா, ஆர்.சதீஸ் ஆகியோரும் பேசினர். இப்பட்டிமன்றத்தில் எமரால்ட் ஜுவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிட்., மற்றும் கோவை உபமண்டலம், தேசிய பாதுகாப்பு குழுமம் உறுப்பினர் துணை மேலாளர் (பாதுகாப்பு) சி.ராஜேஷ்வரன் நடுவராக செயல்பட்டார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...