பல்லடத்தில் போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி - பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு!

உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், பல்லடத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: பல்லடத்தில் உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பல்லடம் உட்கோட்ட காவல்துறை சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு "say no to drugs" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



இந்த பேரணியை பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் சவுமியா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். 



பல்லடம் நால்ரோடு பகுதியில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, காந்தி ரோடு வழியாகச் சென்று அரசு கல்லூரி அருகே போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. 



இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். 

இந்த விழிப்புணர்வு பேரணியில், டாக்டர்கள் ராஜ்குமார், ராமசாமி, காவல் ஆய்வாளர்கள் மணிகண்டன், கோபாலகிருஷ்ணன், சரஸ்வதி, பர்வீனா பானு, மற்றும் போலீசார், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...