காதர்பேட்டை பனியன் சந்தை தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு மேயர் நேரில் ஆறுதல்!

காதர்பேட்டை பனியன் சந்தையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த தீவிபத்து குறித்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட வணிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காதர் பேட்டை பனியன் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்களை மாநகராட்சி மேயர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

காதர் பேட்டை பனியன் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்ததில் 50 கடைகள் எரிந்து சேதம் அடைந்தது. 



சுமார் ஒரு கோடி ருபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ள நிலையில் தீ விபத்து நடந்த இடத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். 



அதனை தொடர்ந்து தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் எந்தெந்த உதவிகள் செய்ய முடியுமோ அவை அனைத்தும் செய்து தருவதாக வணிகர்களுக்கு உறுதி அளித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...