சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் - திருப்பூரில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி!

திருப்பூரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாநகர காவல்துறையின் சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாணவர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: திருப்பூரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் சர்வதேச போதைப் பொருள் மற்றும் கடத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.சி.அரசு மேல்நிலை பள்ளியில் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.



முன்னதாக மாணவர்கள் மத்தியில் போதை பொருளினால் ஏற்படும் விளைவுகள் குறித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது. 



தொடர்ந்து பேரணியை மாநகர காவல் ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 



பேரணியில் போதை பொருளால் ஏற்பட கூடிய விளைவுகள் குறித்த பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். 

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார், மாநகர காவல் துணை ஆணையர் வனிதா, உதவி ஆணையர் கார்த்திகேயன், காவல் ஆய்வாளர்கள், கணேசன், சிவசங்கரி, உள்ளிட்ட காவலர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...