உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் - எஸ்.பி. பங்கேற்பு!

போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



திருப்பூர்: போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, உடுமலை அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்டம் எஸ்.பி கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் கலைக்கல்லூரி முதல்வர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, இன்றைய காலத்தில் போதை பொருள் பழக்கத்தால் பல்வேறு இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். வாழ்வில் முன்னேற்றம் அடையாமல் பல இளைஞர்கள் தடம் மாறி உள்ளனர்.



போதை பொருள் என்னும் பழக்கம் இன்றைய இளம் தலைமுறைகளை அதிகளவு பாதித்தது என்பது குறிப்பிடலாம். ஆகையால் இனி வரும் காலங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் மற்றும் நண்பர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இறுதியில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. 



நிகழ்வில் உடுமலை காவல் ஆய்வாளர்கள் ராஜ் கண்ணா மற்றும் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...