கோவை குறிச்சி அருகே கஞ்சா விற்ற இளம் தம்பதி கைது!

கோவை குறிச்சி பிரிவு அருகே இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளம் தம்பதி அசாருதீன் - சபீனா ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 1.3 கிலோ அளவிலான கஞ்சாப் பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். 

கோவையில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறிச்சி பிரிவு அருகே இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து உதவி ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் குறிச்சி பிரிவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தனியார் உணவகம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த பெண் உட்பட இரண்டு பேரை, போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் பிடிபட்ட நபர்கள் குனியமுத்தூர் கங்கா நகர் 8 ஆவது வீதியை சேர்ந்த சிராஜுதீன் மகன் அசாருதீன் (30), மற்றும் அவரது மனைவி சபீனா (30) என்பதும் தெரியவந்தது.

மேலும் இருவரும் தனித்தனியே கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக மறைத்து வைத்திருந்து, அதனை இளைஞர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சபீனாவிடமிருந்து 1.1 கிலோ மற்றும் அசாருதீனிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...