கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வெள்ளக்கிணர் பகுதியில் கரைக்கப்பட்டன. வறட்சி காரணமாக இயற்கை குட்டையில் நீர் இல்லாததால், மாநகராட்சி சார்பில் 20 அடி ஆழத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட குட்டையில் நீர் நிரப்பப்பட்டு, அதில் சிலைகள் மூழ்கடிக்கப்பட்டன. மாநகராட்சி மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை ஊழியர்கள் நீரில் இறங்கி சிலைகளை பெற்று கரைத்தனர். நிகழ்ச்சியை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Coimbatore: கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மூன்றாம் நாளான இன்று வெள்ளக்கிணர் பகுதியில் செயற்கையாக அமைக்கப்பட்ட குட்டையில் கரைக்கப்பட்டன.
கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் இந்து முன்னணி, பாரதிய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிசத், அகில பாரத இந்து மஹா சபா, இந்து மக்கள் கட்சி, பாரத் சேனா, சிவ சேனா, அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தன.

மூன்றாம் நாளான இன்று அவ்வாறு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து வெள்ளக்கிணர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. வறட்சி காரணமாக அப்பகுதி குட்டையில் நீர் இல்லாததால், மாநகராட்சி சார்பில் 20 அடி ஆழத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட குட்டையில் நீர் நிரப்பப்பட்டு, அதில் சிலைகள் கரைக்கப்பட்டன.

குட்டையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை ஊழியர்கள் தண்ணீரில் இறங்கி விநாயகர் சிலைகளைப் பெற்று நீரில் மூழ்க வைத்து கரைத்தனர். விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைக்கும் நிகழ்ச்சியை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் இந்து முன்னணி, பாரதிய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிசத், அகில பாரத இந்து மஹா சபா, இந்து மக்கள் கட்சி, பாரத் சேனா, சிவ சேனா, அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தன.
மூன்றாம் நாளான இன்று அவ்வாறு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து வெள்ளக்கிணர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. வறட்சி காரணமாக அப்பகுதி குட்டையில் நீர் இல்லாததால், மாநகராட்சி சார்பில் 20 அடி ஆழத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட குட்டையில் நீர் நிரப்பப்பட்டு, அதில் சிலைகள் கரைக்கப்பட்டன.
குட்டையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை ஊழியர்கள் தண்ணீரில் இறங்கி விநாயகர் சிலைகளைப் பெற்று நீரில் மூழ்க வைத்து கரைத்தனர். விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைக்கும் நிகழ்ச்சியை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.