உடுமலையில் ரஜேந்திரா ரோட்டில் வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்க சி.ஐ.டி.யு கோரிக்கை!

உடுமலை வார சந்தைக்கு எதிரே ராஜேந்திரா ரோட்டில் வாடகை வாகனங்கள் நிறுத்தக்கூடாது என நகராட்சி அதிகாரிகள் கூறியதால், வாழ்வாதாரம் இழந்துள்ள வாடகை வாகன ஓட்டுனர்கள், மீண்டும் அதே இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு கோரிக்கை விடுத்துள்ளது.



திருப்பூர்: உடுமலை அருகே ராஜேந்திரா ரோட்டில் வாடகை வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு கோரிக்கை விடுத்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் வாரச்சந்தைக்கு எதிர்ப்புறம் உள்ள ராஜேந்திரா ரோட்டில் கடந்த 30 ஆண்டுகளாக மினிடோர், டூரிஸ்ட் கார், வேன், டெம்போ உள்பட 100க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வாடகைக்கு ஓட்டி தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. எனவே வாகனங்களை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் நிறுத்த வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சி.ஐ.டி.யு சங்கத்தின் தலைமையில் ஒன்று சேர்ந்து உடுமலை நகர மன்ற தலைவர் மு.மத்தீனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்தையில் ஏற்கனவே உள்ள அதே இடத்தில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்திக் கொள்வது என்றும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை சீராக முறைப்படுத்தி நிறுத்திக்கொள்வது என்றும் பேசி முறைப்படுத்தப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையில் CITU நிர்வாகிகள் தண்டபாணி, மதுசூதனன், பஞ்சலிங்கம், சுதா சுப்பிரமணியம்,இயேசு ராஜ், தோழர் ராஜா உள்பட வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...