உடுமலையில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்!

நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேரு வீதியில் உள்ள மகாத்மா காந்தி விடுதியில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், காந்தி ஆசிரமம் உண்டு உறைவிட பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.



திருப்பூர்: உடுமலையில் நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி சங்கர் ஆலோசனைப்படி உடுமலை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேரு வீதியில் உள்ள மகாத்மா காந்தி விடுதியில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 



உடுமலை நகர பொறுப்பாளர், திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ராமன் தலைமையில் இந்த அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காந்தி ஆசிரமம் உண்டு உறைவிட பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மகாத்மா காந்தி விடுதிக்கு 25 டம்ளர்கள் வழங்கப்பட்டது.

உடுமலை நகர செயலாளர் காஜா மைதீன், இணைச் செயலாளர் சையது இப்ராஹிம், உடுமலை ஒன்றிய தலைவர் அபுதாகிர், உடுமலை ஒன்றிய செயலாளர் முகமது அசாரூதீன், உடுமலை ஒன்றிய இணைச் செயலாளர் அக்பர் பாஷா, ஒன்றிய இணைத்தலைவர் ரியாஸ் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...