உடுமலையில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்!

நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேரு வீதியில் உள்ள மகாத்மா காந்தி விடுதியில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், காந்தி ஆசிரமம் உண்டு உறைவிட பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.



திருப்பூர்: உடுமலையில் நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி சங்கர் ஆலோசனைப்படி உடுமலை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேரு வீதியில் உள்ள மகாத்மா காந்தி விடுதியில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 



உடுமலை நகர பொறுப்பாளர், திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ராமன் தலைமையில் இந்த அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காந்தி ஆசிரமம் உண்டு உறைவிட பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மகாத்மா காந்தி விடுதிக்கு 25 டம்ளர்கள் வழங்கப்பட்டது.

உடுமலை நகர செயலாளர் காஜா மைதீன், இணைச் செயலாளர் சையது இப்ராஹிம், உடுமலை ஒன்றிய தலைவர் அபுதாகிர், உடுமலை ஒன்றிய செயலாளர் முகமது அசாரூதீன், உடுமலை ஒன்றிய இணைச் செயலாளர் அக்பர் பாஷா, ஒன்றிய இணைத்தலைவர் ரியாஸ் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...