காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி துவக்க விழா - புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு!

காரணம்பேட்டையில் நடைபெற்ற ‘திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி’ துவக்க விழாவில் சங்கத்தின் பட்டய தலைவராக ராமகிருஷ்ணன், பட்டய செயலாளராக கார்த்திகேயன், பட்டய பொருளாளராக நவீன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். மேலும் புதிய நிர்வாகிகள் ரோட்டரி சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



திருப்பூர்: காரணம்பேட்டையில் நடைபெற்ற ‘திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி’ துவக்க விழாவில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இன்று திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் இளங்கோவன் கலந்து கொண்டார். 

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக பட்டய தலைவராக ராமகிருஷ்ணன், பட்டய செயலாளராக கார்த்திகேயன், பட்டய பொருளாளராக நவீன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இதைத்தொடர்ந்து ரோட்டரி உறுப்பினர்களாக ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். 



மேலும் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள் ரோட்டரி சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

விழாவின் தொடர்ச்சியாக சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஓடந்துறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...