துடியலூரில் முறையான குடிநீர் வழங்க கோரிக்கை - ஊராட்சி அலுவலகம் முற்றுகை!

கோவை துடியலூரை அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராகுல்காந்தி நகர் பொதுமக்கள் குடிநீர் விநியோகிக்க கோரி ஊராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓரிரு நாளில் குடிநீர் விநியோக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.



கோவை: துடியலூர் அடுத்த குருடம்பாளையம் அருகே முறையாக குடிநீர் விநியோகிக்க கோரி ஊராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

துடியலூர் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராகுல் காந்தி நகர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று குருடம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



அப்போது ஊராட்சி அலுவலகத்தில் இருந்த ஊராட்சி செயலர் சண்முகம் அப்பகுதியில் கால்வாய் பணி நடைபெற்று வருவதால் குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் குடிநீர் விநியோகம் சீராகும் என தெரிவித்ததைத் தொடர்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...