முதல்வர் மற்றும் பெரியார் குறித்து அவதூறு பரப்பிய பாஜக பெண் பிரமுகர் கைது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெரியார் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்த பாஜக பெண் ஆதரவாளரான உமா கார்க்கி கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது திமுக ஐடி விங் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழக முதல்வர் மற்றும் தந்தை பெரியார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக பாஜக பெண் ஆதரவாளரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவையை சேர்ந்த பாஜக பெண் ஆதரவாளரான உமா கார்க்கி என்பவர், தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் தந்தை பெரியார் மற்றும் தமிழக முதல்வர் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் திமுக ஐடி விங்கை சேர்ந்த ஹரீஸ் என்பவர் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



விசாரணையில் சிக்கியுள்ள பாஜக பெண் ஆதரவாளர் உமா கார்க்கிக்கு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு சமூக செயல்பாட்டாளருக்கான விருது வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் உமா கார்க்கி அன்மையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பெரியார், அம்பேத்கரை படிக்க அறிவுறுத்தியதை மேற்கோள் காட்டியும் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றியும் அவதூறாக கருத்துகளை வெளியிட்டுள்ளது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...