முதல்வர் மற்றும் பெரியார் குறித்து அவதூறு பரப்பிய பாஜக பெண் பிரமுகர் கைது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெரியார் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்த பாஜக பெண் ஆதரவாளரான உமா கார்க்கி கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது திமுக ஐடி விங் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழக முதல்வர் மற்றும் தந்தை பெரியார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக பாஜக பெண் ஆதரவாளரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவையை சேர்ந்த பாஜக பெண் ஆதரவாளரான உமா கார்க்கி என்பவர், தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் தந்தை பெரியார் மற்றும் தமிழக முதல்வர் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் திமுக ஐடி விங்கை சேர்ந்த ஹரீஸ் என்பவர் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



விசாரணையில் சிக்கியுள்ள பாஜக பெண் ஆதரவாளர் உமா கார்க்கிக்கு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு சமூக செயல்பாட்டாளருக்கான விருது வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் உமா கார்க்கி அன்மையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பெரியார், அம்பேத்கரை படிக்க அறிவுறுத்தியதை மேற்கோள் காட்டியும் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றியும் அவதூறாக கருத்துகளை வெளியிட்டுள்ளது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...