பல்லடம் அருகே கொரியர் வேன் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்த கார் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

பல்லடம் அடுத்த செட்டிபாளையம் சாலையில் கொரியர் வேன் மீது கார் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொரியர் வேன் மீது கார் மோதி தலைகீழாக கவிழ்ந்த விபத்து குறித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அடுத்த செட்டிபாளையம் சாலையில் சி.டி.சி காலனியில் இருந்து கொரியர் ஏற்றிக் கொண்டு வந்த டாட்டா ஏஸ் கூட்ஸ் வாகனம் பல்லடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது செட்டிபாளையத்திலிருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் வடுகபாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கோகுல் மற்றும் கொரியர் டெலிவரி ஊழியர் ரமேஷ் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் ஆல்டோ காரில் பயணித்த நாமக்கல் பகுதியை சேர்ந்த சுஜித் மற்றும் அவரது தாய் பரமேஸ்வரி ஆகியோர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



4 பேர் படுகாயமடைந்த நிலையில் இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பல்லடம் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...