பல்லடம் அருகே கொரியர் வேன் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்த கார் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

பல்லடம் அடுத்த செட்டிபாளையம் சாலையில் கொரியர் வேன் மீது கார் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொரியர் வேன் மீது கார் மோதி தலைகீழாக கவிழ்ந்த விபத்து குறித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அடுத்த செட்டிபாளையம் சாலையில் சி.டி.சி காலனியில் இருந்து கொரியர் ஏற்றிக் கொண்டு வந்த டாட்டா ஏஸ் கூட்ஸ் வாகனம் பல்லடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது செட்டிபாளையத்திலிருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் வடுகபாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கோகுல் மற்றும் கொரியர் டெலிவரி ஊழியர் ரமேஷ் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் ஆல்டோ காரில் பயணித்த நாமக்கல் பகுதியை சேர்ந்த சுஜித் மற்றும் அவரது தாய் பரமேஸ்வரி ஆகியோர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



4 பேர் படுகாயமடைந்த நிலையில் இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பல்லடம் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...