கோவையில் வரும் ஜூலை 1-ல் நடிகை ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி!

கோவையில் வரும் ஜூலை 1ஆம் தேதி ரெட்நூல் நிறுவனத்தின் சார்பில் ஹிந்துஸ்தான் கலை கல்லூரியில் நடிகை ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பேசிய ஆன்ட்ரியா, இந்த கச்சேரியில் இளையராஜாவின் பாடல்களும், தான் பாடிய பாடல்களும் இடம்பெறும் என்றார்.



கோவை: கோவையில் வரும் ஜூலை 1ம் தேதி ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் ரெட்நூல் நிறுவனத்தின் சார்பில் ஹிந்துஸ்தான் கலை கல்லூரியில் நடிகையும், பாடகியுமான ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி வரும் ஜூலை மாதம் 1ம் தேதி நடைபெறுகிறது.



இந்த இசைக் கச்சேரி குறித்த செய்தியாளர் சந்திப்பு சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் மாலில் நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களை சந்தித்த ஆன்ட்ரியா,



கோலாலம்பூரில் கடைசியாக இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. இந்த கச்சேரி நன்றாக நடைபெற்றது.

தொடர்ந்து கோவையில் வரும் 1ம் தேதி இசைக்கச்சேரி நடைபெறுகிறது. இந்த கச்சேரி 2 மணி நேரம் நடைபெறுகிறது. இளையராஜா பாடல்களும், நான் பாடிய பாடல்களும் இந்த கச்சேரியில் இடம் பெறுகிறது.

கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். கோவையில் நல்ல ரசிகர்களை எதிர்பார்த்து இந்த கச்சேரியை நடத்துகிறோம். நடிப்பு, பாடல் எதுவுமே ஈசி இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நான் வகுப்புக்கு சென்றதால் தற்போது சுலபமாக பாடுகிறேன்.

நான் கோவைக்கு பாடல் பாடத்தான் வருகிறேன். அரசியலுக்கு வரவில்லை. பெண்களை திட்டுவது போன்ற பாடல்களை நான் கேட்கமாட்டேன். மற்றவர்கள் இது போன்ற பாடல்கள் பாடினால் நான் அதுகுறித்து யோசிப்பதே இல்லை. நான் அப்படிப்பட்டவள் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...