கோவை அருகே கண்டெய்னர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலியான சோகம்!

கோவை எல்.அன்.டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தருணன் (21) என்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை எல்.அன்.டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வரதராஜபுரம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் பூபாலகிருஷ்ணன் என்பவரது மகன் தருணன் (21). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தருணன் தனது இருசக்கர வாகனத்தில் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எல் அண்ட் டி பைபாஸ் ஜல்லிக்கட்டு மைதானம் அருகே வந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தருணன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். அப்போது, அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோவை மேற்கு புலனாய்வு போலீசார் கண்டெய்னர் லாரி ஓட்டுனரான சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (42), என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...