கோவையில் ‘கிராஃப்ட் பஜார் 2023’ என்ற கைவினை பொருட்கள் விற்பனை, கண்காட்சி துவக்கம்!

கோவை - அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், ‘கிராஃப்ட் பஜார் 2023’ என்ற கைவினை பொருட்கள் விற்பனை, கண்காட்சி துவங்கியுள்ளது. ஜுன் 16-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், நாடு முழுவதிலும் உள்ள கைவினை தொழில் செய்பவர்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை - அவிநாசி சாலையில் ‘கிராஃப்ட் பஜார் 2023’ என்ற தலைப்பில் கைவினை பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி துவங்கியுள்ளது. 

கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் தமிழ்நாடு 1988 ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது. இந்திய கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களை ஊக்குவிப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். 



“கிராப்ட் பஜார்" மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள கைவினைத் தொழில் செய்பவர்களுக்கு ஜவுளி மற்றும் கைவினை பொருட்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஒரு தளத்தை கிராப்ட் பஜார் வழங்குகிறது. 



இந்த ஆண்டு அஸ்ஸாம் முதல் கேரளா வரை 100க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 



கலைபொருட்கள், ஓவியங்கள், கைவினைபொருள் அரங்கு, பித்தளை, கண்ணாடி மற்றும் மர கலைபொருட்கள், மணிகள், லாக் அண்டு கண்ணாடி வளையல்கள், டோக்ரா, ஜூடிஸ், நாணல் மற்றும் கழிவு துணி பாய்கள், உலர் பூக்கள், பாண்டிச்சேரியில் இருந்து விளக்கு நிழல்கள், உலோகம், டெரகோட்டா, கல்சட்டி, மினியேச்சர் மண்பாண்டங்கள், நீல மண்பாண்டங்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



கோவை - அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் இன்று காலை துவங்கிய இக்கண்காட்சியை தஸ்கரி ஹாத் சமிதிரூ தில்லி ஹாத் அறக்கட்டளை நிர்வாகி ஜெயா ஜேட்லி துவக்கி வைத்தார். இதில் கிராப்பட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு கோவை கிளை நிர்வாகிகிள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...