மட்டரகமான அரசியலை பாஜக செய்து வருகிறது - விவசாய தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்.குமார் கண்டனம்!

கோவையில் நடைபெற்ற விவசாய தொழிலாளர்கள் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாஜக அரசு, திமுக அரசை முடக்கும் விதமாக அமலாக்கத்துறையை ஏவிவிட்டு, மட்டரகமான அரசியலை செய்து வருவதாக விவசாய தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்.குமார் கண்டனம் தெரிவித்தார்.



கோவை: மத்திய பாஜக அரசு மட்ட ரகமான அரசியலை செய்து வருவதாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் கோவை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம், கோவை மத்திய மற்றும் வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் மாநில இளைஞரணி பொருளாளர் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் குருஸ் முத்து பிரின்ஸ் தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, மாவட்டத்திற்கு விவசாய தொழிலாளர் கட்சியின் பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். 

இதில் புதிய பொறுப்பாளர்களான, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பொறியாளர் ராஜா, கோவை மத்திய மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார், கோவை மத்திய மாவட்ட அமைப்பாளர் ஆனந்தராஜ், தமிழக கட்டட தொழிலாளர் மத்திய சங்கம் கோவை மத்திய மாவட்டம் அமைப்பாளர் ஜெயபால் ஆகியோரை பதவி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக இரண்டு தொகுதிகள் கொண்டது ஒரு மாவட்டமாக பிரிக்கப்பட்டு அந்த மாவட்டங்களுக்கு விவசாய தொழிலாளர் கட்சியின் நிர்வாக ஏற்படுத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளுவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது. 

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, இவை அனைத்திலும் முதன்மை பெற்ற இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. சிறந்த ஆட்சி வழங்கி வரக்கூடிய மு.க.ஸ்டாலின் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் மத்திய மோடி அரசு தலைமைச் செயலகத்தில் ஒரு அமைச்சர் அறையில் வருமான வரித்துறை மூலம் அமலாக்க துறைகளை பயன்படுத்தி சோதனையை நடத்துவது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய இழுக்கு ஆகும்.

இந்த செயலை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. பாரதிய ஜனதா ஆட்சி இல்லாத மாநிலங்களில் இப்படி சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி அந்த அரசை பணிய வைப்பது, ஆட்களை விலை கொடுத்து வாங்குவது, போன்ற மட்டரகமான அரசியலை பாரதிய ஜனதா கட்சி செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதை உடனடியாக மத்திய மோடி அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்த கூட்டம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜகா. முருகன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி பொதுச் செயலாளர் பொறியாளர் ஜெகதீசன், தமிழக கட்டட தொழிலாளர் மத்திய சங்கம் பொதுச்செயலாளர் சுந்தர்ராஜன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...