கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - முதியவருக்கு 20 ஆண்டு சிறை!

கோவையில் கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கடையின் உரிமையாளரான கனகராஜ் (76) என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

கோவை: கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 76 வயதான முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையில் மோர் மிளகாய் வாங்க மளிகை கடைக்கு வந்த 10 வயது சிறுமியை, கடையின் உரிமையாளரான கனகராஜ் (76)  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடைக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகி வீட்டிற்கு வந்ததால், அதுகுறித்து விசாரித்தபோது நடந்ததை பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார்.

இதனையடுத்து, பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கனகராஜை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கனகராஜூக்கு (76) 20 ஆண்டு சிறை தண்டனையும், 20ஆயிரம்  அபராதம் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம்  நிவாரணமாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...