ஜூலை 6-ல் கோவையில் 59வது வெப்பமண்டல உயிரியல், பாதுகாப்பு சங்க சந்திப்பு!

59 வது வெப்பமண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் வருடாந்திர சந்திப்பு கோவை குமரகுரு கல்லூரியில் வரும் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தொழில் வல்லுனர்கள், இயற்கை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

கோவை: கோவை குமரகுரு கல்லூரியில் 59 வது வெப்பமண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் வருடாந்திர சந்திப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கம் நிலப்பரப்பு, கடல் மற்றும் கடலோர நிலப்பரப்புகளில் உள்ள சிக்கல்களை கண்டறிதல். காடுகள், விவசாயம், காலநிலை மாற்றம் மற்றும் சுகாதார அணுகுமுறைகளை கையாளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இச்சங்கத்தின் 59 வது வருடாந்திர சந்திப்பு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வருகிற ஜூலை 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை இயற்கை சூழலிகளுக்கான இந்திய பிராந்திய சங்கம், குமரகுரு நிறுவனங்கள் ஒருங்கிணைக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் இந்திய வனவிலங்கு நிறுவனம், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம், போபால் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், ஓசை பாதுகாப்பு மற்றும் ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோரும் இணைந்து ஒருங்கிணைக்க உள்ளனர்.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள குமரகுரு சிட்டி சென்டரில் நடைபெற்றது, இதில் செய்தியாளர்களை சந்தித்த இச்சங்கத்தினர் கூறியதாவது,

வெப்ப மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் உலகளாவிய சந்திப்பு இந்தியாவில் இரண்டாவது முறையாக, "அறிவியலின் சமநிலை தன்மை, பாதுகாப்பு மற்றும் சமூகம்" எனும் கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தொழில் வல்லுனர்கள், இயற்கை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

அந்நிகழ்வில் இயற்கை சார்ந்த செயல்களுக்கு முன்னுரிமை வழங்குதல், நீலகிரி உயிர்க்கோள காப்பக சுற்றுப்புறம், வெப்ப மண்டல சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியமான இடங்கள் மற்றும் உலகளாவிய காலநிலை தன்மை பராமரிப்பு பற்றிய கருத்தரங்கம் முக்கிய நிகழ்வாக அமைய உள்ளது.

இது போன்ற பலதரப்பட்ட பங்குதாரர்களை ஒன்றிணைப்பதன் மூலம் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் கொள்கை உருவாக்கம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நிகழ்வுகள் ஆகியவை தற்காலிக நிகழ்வுகளுக்கும் எதிர்கால தீர்வுகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....