திருப்பூர் அருகே நிலத்தடி நீரில் சாயக்கழிவு கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்!

திருப்பூர் அடுத்த சொர்ணபுரி கார்டன் பகுதியில் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து கிடைக்கும் நிலத்தடி நீரில் சாய கழிவுகள் கலந்து நிறம் மாறி வருவதாக கூறி, அப்பகுதி மக்கள் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த சொர்ணபுரி கார்டன் பகுதியில் நிலத்தடி நீரில் சாயக்கழிவு கலந்து. தண்ணீர் நிறம் மாறி வருவதாக பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் சொர்ணபுரி கார்டன் பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியை சுற்றிலும் ஏராளமான சாய ஆலைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் நிறம் மாறி மாசடைந்து வருவதாக கூறப்படுகிறது. 

அந்த தண்ணீரை பயன்படுத்துவதால் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் தோல் அரிப்பு போன்ற உடல் நல கோளாறுகள் ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் கெடும் வகையில் சாய ஆலைகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, வருங்கால சந்ததியை பாதிக்கும் வகையில் நிலத்தடிநீரை கழிவாக மாற்றிய சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இந்நிலையில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மாசடைந்த நிலத்தடி நீரையும் பாட்டிலில் அடைத்து கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...