சூலூர் ரயில் நிலையம், பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, சூலூர் ரயில் நிலையம், மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சூலூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த முத்துகாதர் (29) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் சூலூர் ரயில் நிலையம், மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நபர் ஒருவர் கோவை சூலூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் வெடிக்குண்டு வைத்திருப்பதாக சிலர் பேசிக்கொள்வதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து அவருக்கு மீண்டும் போலீசார் அழைத்த போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான போலீசார் சூலூர் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் மீண்டும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த செல்போன் எண் மீண்டும் ஆன் செய்யப்பட்டதால், செல்போன் சிக்னலை வைத்து சூலூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இருந்த முத்துகாதர் (29) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

உக்கடம் பகுதியில் இருந்து கடத்த 2 மாதங்களுக்கு முன் சூலூரில் குடியேறிய முத்துகாதர் மது போதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து தவறான தவலை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...