உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறுதுளி நிறுவனம் சார்பில் திட்டங்கள் தொடங்கி வைப்பு!

சிறுதுளி நிறுவனத்தின் சார்பில், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளக்கரைகளை மேம்படுத்துவது, தூர்வாரும் பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகளை தன்னார்வலர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: சிறுதுளி நிறுவனத்தின் சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 2003ஆம் ஆண்டு சிறுதுளி என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. கோயம்பத்தூரில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்து வருகின்றன. குறிப்பாக நீர் மேலாண்மை, பசுமை பாதுகாப்பு, விழிப்புணர்வு, கழிவுநீர் மேலாண்மை மற்றும் விவசாய மேம்பாடு போன்ற பணிகளை கடந்த 20 ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.



சிறுதுளி மற்றும் பாஷ் நிறுவனம் இணைந்து துடியலூர் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் 5௦௦௦ மரங்கள் நடப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக இதனை பராமரித்து மரங்கள் நன்கு வளர்ச்சி அடைத்து உள்ளது. இதனால் அங்கு சுற்றுசூழல் மாறுதல் ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.



உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாஷ் நிறுவனம் கடந்த ஜூன் 3ஆம் தேதி சுமார் 100 தன்னார்வலர்களை கொண்டு காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை களையெடுத்தல், செடிகளை சுற்றி கரை அமைத்தல், இடத்தினை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்தனர்.



குறிப்பாக நீர் மேலாண்மை, பசுமை பாதுகாப்பு, விழிப்புணர்வு, கழிவுநீர் மேலாண்மை மற்றும் விவசாய மேம்பாடு போன்ற பணிகளை கடந்த 20 ஆண்டுகளாக செய்து வருகின்றன.



இதனை தொடர்து, சிறுதுளி மற்றும் APEXON நிறுவனம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 3ஆம் தேதி 150 நபர்கள் கொண்ட குழு சுமார் 150 நாட்டு மரகன்றுகள் துடியலூர் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் நடப்பட்டது.

இந்நிகழ்வில் APEXON நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிறுதுளி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



சிறுதுளி மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் இணைந்து ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரூர் செட்டிபாளையத்தில் எம்.ஆர்.கார்டன் என்ற இடத்தில் சுமார் 1000 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கப்பட்டது.



தொடர்ந்து, ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு வாலாங்குளத்தில் வடக்கு கரையில் மரங்கள் நடும் பணி துவக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாலாங்குளத்தில் சிறுதுளி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி கோயம்பத்தூர் கிளைகள் இணைந்து நீர்நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் குளத்தின் கரைகளை சுற்றி பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கும் பணியை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் PSG கல்லூரியை சேர்ந்த சுமார் 100 தன்னார்வலர்களை கொண்டு கரைகளை சுத்தம் செய்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...