கோவை காவல்துறையின் தெருவோர நூலகங்களுக்கு 200 புத்தகங்களை வழங்கிய மாணவி!

கோவை மாநகர காவல்துறையின் தெருவோர நூலகங்களை கண்ட ஐதராபாத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் கோவை சேர்ந்த மாணவி, இந்த நூலகங்களுக்காக 200 புத்தகங்களை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று வழங்கினார்.



கோவை: கோவை மாநகர காவல்துறையின் தெருவோர நூலகங்களுக்கு 200 புத்தகங்களை வழங்கிய 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் ஐதராபாத்தில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கோடை விடுமுறைக்காக கோவை வந்துள்ள நிலையில், கோவை மாநகரக் காவல் துறை சார்பாக வைத்துள்ள தெருவோர நூலகங்களை பார்த்துள்ளார். 

இந்நிலையில் அந்த நூலகங்களுக்கு 200 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அந்த புத்தகங்கள் தற்போது, தெருவோர நாலகங்கள் மற்றும் ஆட்டோ நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாணவி ஏற்கனவே 12 வயதில் புத்தகங்களை வீடு வீடாக போய் சேகரித்து அந்த புத்தகங்களை நூலகங்கள் அமைப்பதற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த மாணவி புத்தகங்களை சேகரித்து நூலகங்களை அமைப்பதற்கு எடுத்த முயற்சிக்காக இந்தியா முழுவதும் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...