பூரண மதுவிலக்கு கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க நாம் தமிழர் கட்சி முடிவு!

கோவை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வரும் ஜூன் 12ஆம் தேதி திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியின் மகளிர்‌ பாசறையின்‌ சார்பாக மனு கொடுக்க உள்ளதாக அறிவிப்பு.‌



கோவை: பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 







பூரண மதுவிலக்கு என்பதை நாம்‌ தமிழர்‌ கட்சி கொள்கையாக‌ கொண்டுள்ளது. அதன்‌ அடிப்படையில்‌ வரும்‌ ஜூன் 12ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ பூரண மதுவிலக்கு கோரி, பொதுமக்களிடம்‌ கையெழுத்து பெற்று மகளிர்‌ பாசறையின்‌ சார்பாக மனு கொடுக்க உள்ளோம்‌.



எனவே தானியங்கி பிரச்சார வாகனம்‌ மூலம்‌ பொதுமக்களிடம்‌ கையெழுத்து பெற அனுமதி கொடுக்குமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌. இதனால்‌ பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும்‌ வராது என்பதை உறுதீபட தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் இதுபோல வழிமுறையை பின்பற்றுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...