கோவை அருகே அத்திகடவு – பில்லூர் பிரதான குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் - மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள அத்திக்கடவு - பில்லூர் குடிநீர் 1வது திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கோடிக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வரும் நிலையில், உடைப்பை சரிசெய்யும் பணியின் காரணமாக 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது எனவும் அறிவிப்பு.

கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே அத்திக்கடவு - பில்லூர் குடிநீர் 1வது திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. 

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கடந்த 2020ம் ஆண்டு முதல் சுமார் 88 கோடி மதிப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா முதல் வண்ணாங்கோவில் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் தினமும் வாகன நெரிசல்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு ஏற்படும் புழுதியில் தான் மக்கள் தினமும் சென்று வருகின்றனர்.

மேலும் அதே பகுதியில் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அத்திக்கடவு –பில்லூர் குடிநீர் 1வது திட்டத்தில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இன்று மாலை அந்த குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் ஆற்று வெள்ளம் போல பெரியநாயக்கன் பாளையத்தில் பெருக்கெடுத்து ஓடியது.



இதுகுறித்து உடனடியாக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முக்கிய தண்ணீர் குழாயாக இருப்பதால் உடனடியாக தண்ணீரை நிறுத்த முடியவில்லை. இதன் காரணமாக கோடிகணக்கான லிட்டர் தண்ணீர் வீணானது. இரவு நேரத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் வேலை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வரும் 2 நாட்களுக்கு அத்திகடவு - பில்லூர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் இருக்காது என்று தெரிகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ, போட்டோ எடுத்து முகநூல், வாட்ஸ் ஆப்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...