ரூ.1,300 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட நபர் கோவை நீதிமன்றத்தில் சரண்!

கோவை பீளமேடு அருகே யு.டி.எஸ் என்ற நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 4 திட்டங்களில், 76,000-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்த ரூ.1300 கோடி பணத்தை மோசடி செய்ததாக புகார்கள் குவிந்த நிலையில், நிறுவன உரிமையாளர் ரமேஷ் (30) கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.



கோவை: ரூ.1,300 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த யுடிஎஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.



கோவை மாவட்டம் சூலுாரை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் பீளமேடு பகுதியில் யு.டி.எஸ்., எனும் நிறுவனத்தை, 2012ம் ஆண்டு துவங்கி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளாவில் கிளைகளை ஏற்படுத்தினார்.

இந்த நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட, 4 திட்டங்களில், 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ.1300 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். மக்களின் முதலீட்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல், ரமேஷ் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக டி.எஸ்.பி., முருகானந்தம் தலைமையில், தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவான ரமேஷ் கடந்த, 6ம் தேதி கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, சேலத்தில், அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரமேஷ் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வந்தவர், சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். புகார்கள் குவிந்ததால் தலைமறைவானார். 

இந்நிலையில் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்ததை அறிந்து அவர் டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கேரளாவிலும் அவர் மீது வழக்குகள் உள்ளதால், அம்மாநில போலீசார் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். கோவை போலீசாரும் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். 

முதலீடு செய்த, 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில், இதுவரை தமிழகத்தில் 50 பேரும், கேரளாவில் 44 பேரும் மட்டுமே புகார் அளித்துள்ளனர். 

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...