பல்லடம் அருகே திரௌபதி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் திருவிழா கோலாகலம்!

பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையத்தில் 34 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் குண்டம் இறங்கும் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் இறங்கும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள வே.கள்ளிப்பாளையம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 34 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கோவிலின் குண்டம் இறங்கும் விழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தொடர்ந்து, கிராம சாந்தி நிகழ்வு, முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்வுகளோடு கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



இதனையொட்டி, 25 அடி தூரத்திற்கு குண்டம் அமைக்கப்பட்டு 2 நாட்களாக மரக்கட்டைகளை எரியவிட்டு தயார்படுத்தப்பட்ட குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தபின் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அருளாடியபடி குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.



குண்டம் இறங்கிய பக்தர்கள் கருவறையில் உள்ள தர்மராஜா மற்றும் திரௌபதி அம்மனை வழிபாடு செய்தனர். 



34 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருவிழா நடைபெறுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 



குண்டம் இறங்கும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். 



வே.கள்ளிப்பாளையம் கள்ளக்கிணறு வாவிபாளையம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...