பல்லடம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது!

பல்லடம் சுற்றுவட்டார பகுதியான பொங்கலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா மற்றும் முனியசாமி, திருப்பூரை சேர்ந்த மலையரசன் ஆகியோரை அவிநாசிபாளையம் போலீசார் கைது செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், அவிநாசிபாளையம், காமநாயக்கன் பாளையம் மற்றும் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை மற்றும் பார்களில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகின. 

இந்த நிலையில் அப்பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர். கடந்த மூன்று நாட்களாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். 



அதன்படி பொங்கலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா மற்றும் முனியசாமி, திருப்பூரை சேர்ந்த மலையரசன் ஆகியோரை அவிநாசிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். 



மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 

பல்லடம் சரக காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை குறைந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...