பல்லடம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது!

பல்லடம் சுற்றுவட்டார பகுதியான பொங்கலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா மற்றும் முனியசாமி, திருப்பூரை சேர்ந்த மலையரசன் ஆகியோரை அவிநாசிபாளையம் போலீசார் கைது செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், அவிநாசிபாளையம், காமநாயக்கன் பாளையம் மற்றும் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை மற்றும் பார்களில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகின. 

இந்த நிலையில் அப்பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர். கடந்த மூன்று நாட்களாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். 



அதன்படி பொங்கலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா மற்றும் முனியசாமி, திருப்பூரை சேர்ந்த மலையரசன் ஆகியோரை அவிநாசிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். 



மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 

பல்லடம் சரக காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை குறைந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...