கோவையில் தார் சாலை பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு!

கோவை‌ மாநகராட்சியின் கிழக்கு மற்றும்‌ மேற்கு மண்டலத்தில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும் தார்‌ சாலை பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர்‌ பொன்னையா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தார்‌ சாலையின்‌ தரம் குறித்தும் பரிசோதனை மேற்கொண்டார்.



கோவை: கோவை மாநகராட்சியின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர்‌ பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். 



கோவை‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்‌ 23 தீபா மில்‌ ரோடு பகுதியில்‌ தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ ரூ.1.50 கோடி மதிப்பீட்டில்‌ 2.09 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்‌ சாலை அமைக்கப்பட்டுள்ளது குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர்‌ பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



பின்னர் வார்டு எண்‌.22 குமுதம்‌ நகா்‌ பகுதியில்‌ தமிழ்நாடு நிலையான நகா்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டத்தின் கீழ்‌ ரூ.1.88 கோடி மதிப்பீட்டில்‌ 1.96 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்‌ சாலை அமைக்கப்பட்டுள்ளதையும்‌,



மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.44க்குட்பட்ட சபாபதி வீதி பகுதியில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டத்தின் கீழ்‌ ரூ.15.83 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 213 மீட்டர் தொலைவிற்கு தார்‌ சாலை அமைக்கும்‌ பணி நடைபெற்று வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது, தாரின்‌ வெப்பத்தை நகராட்சி நிர்வாக இயக்குநர்‌ பொன்னையா நேரில்‌ பரிசோதனை செய்து ஆய்வு செய்தார்‌. தொடர்ந்து நகராட்சி நிர்வாக இயக்குநர்‌‌ செய்தியாளர்‌களை சந்தித்த போது பேசியதாவது, 

கோவை மாநகராட்சியில்‌ நடைபெற்று வரும்‌ பல்வேறு சாலை பணிகள்‌ இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில்‌ சுமார்‌ 2500 கிலோ மீட்ட தொலைவிற்கு சாலைகள்‌ உள்ளன. பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ பல்வேறு இடங்களில்‌ தற்போது நடைபெற்று வருகிறது. 

பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ முடிவடைந்த பகுதிகளில்‌ தார்சாலை அமைக்கும்‌ பணிகள்‌ விரைவாக நடைபெற்று வருகின்றன. 2022-23, 2023-24 ஆகிய இரண்டு ஆண்டுகள்‌ நிதியினை கொண்டு ஏறக்குறைய 563 கிலோ மீட்டா்‌ தொலைவிற்கு அமைக்கும்‌ பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதில்‌ 206 கிலோ மீட்டர் தொலைவிற்கு பணிகள்‌ முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள்‌ இன்னும்‌ இரண்டு மாதங்களில்‌ முடிவடையும்‌. கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ உள்ள 100 வார்டு பகுதிகளிலும்‌ பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளில்‌, பாதாள சாக்கடை பணிகள்‌ முடிவடைந்த பின்னர்‌ அங்கு வெட்மிக்ஸ்‌ போடப்பட்டு, உடனடியாக சிமெண்ட்‌ சாலை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தார்‌ சாலைகளின்‌ தரம்‌ குறித்து ஆய்வு செய்ய தனியார்‌ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, தார்‌ சாலையின்‌ தரம்‌ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி உறுதி செய்யப்படும்‌.

மேலும்‌, மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள நெடுஞ்சாலைத்துறையின்‌ மூலமாக சாலை அமைக்கும்‌ பணி நடைபெறும் போது, குடிநீர்‌ குழாய்‌ பதிக்கும்‌ பணி விரிவுபடுத்தப்பட்டு, தடாகம்‌ சாலை விரைவாக அமைக்க மாநகராட்சி ஆணையாளர்‌ சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களோடு ஆலோசனை செய்து, பணியை துரிதப்படுத்தி விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நிர்வாக பிரச்சனை இருப்பின்‌ விரைவில்‌ சரி செய்யப்படும்‌. சீர்மிகு திட்டப்பணிகள்‌ 90 சதவீதம்‌ நிறைவு செய்யப்பட்டுள்ளது மீதமுள்ள பணிகள்‌ விரைவில்‌ நிறைவு பெறும்‌. மேலும்‌ செம்மொழி பூங்கா ரூ.172 கோடி மதிப்பீட்டில்‌ மேற்கொள்ள ஓப்பந்தப்புள்ளி இம்மாத இறுதியில்‌ கோரப்படவுள்ளது. பின்னர்‌ இப்பணிகள்‌ விரைவில்‌ துவங்கப்படும்‌

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...